அமெரிக்காவில் உள்ள ஒரு தெருவுக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
"அமெரிக்க மண்ணில் முதல்முறையாக வடக்கு வர்ஜீனியா மாநிலத்தில் பேர்பேக்ஸ் மாகாணத்தில் வள்ளுவர் தெரு” உருவாகியுள்ளது. அங்கு தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் "வள்ளுவன் தமிழ் மையத்தின்" முயற்சியால் இது நடந்துள்ளது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
மேலும், “தமிழ் சமூக உறுப்பினர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதில் பெருமை கொள்கிறேன். உலகப் புகழ்பெற்ற கவிஞரான திருவள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் முதல்முறையாக வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று வெர்ஜினியா மாநில அவை உறுப்பினர் டெல் டான் ஹெல்மர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த தெரு ஆங்கிலத்தில் Valluvar Way என்றும், தமிழில் வள்ளுவர் தெரு என்றும் அழைக்கப்படும்.
- திருவள்ளுவர் பேரவை.
வாழ்வியல் பாரம்பரியம்
"அமெரிக்க மண்ணில் முதல்முறையாக வடக்கு வர்ஜீனியா மாநிலத்தில் பேர்பேக்ஸ் மாகாணத்தில் வள்ளுவர் தெரு” உருவாகியுள்ளது. அங்கு தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் "வள்ளுவன் தமிழ் மையத்தின்" முயற்சியால் இது நடந்துள்ளது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
மேலும், “தமிழ் சமூக உறுப்பினர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதில் பெருமை கொள்கிறேன். உலகப் புகழ்பெற்ற கவிஞரான திருவள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் முதல்முறையாக வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று வெர்ஜினியா மாநில அவை உறுப்பினர் டெல் டான் ஹெல்மர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த தெரு ஆங்கிலத்தில் Valluvar Way என்றும், தமிழில் வள்ளுவர் தெரு என்றும் அழைக்கப்படும்.
- திருவள்ளுவர் பேரவை.
வாழ்வியல் பாரம்பரியம்